மொத்தப் பக்கக்காட்சிகள்

20 மார்., 2012

முதல் பரிசு..

அப்பன் இல்லாப் பிள்ளை ...
பிள்ளை இல்லா அப்பன்...

தாயில்லை மகளில்லை..
தம்பியில்லை அண்ணனில்லை ..

தமக்கையில்லை தங்கையில்லை
மாமனில்லை மச்சானில்லை....

ஊர் முழுதும் பிணவாசம்
ஊர்ந்து போகும் வெடி வாசம்...

உடுதுணியின்றி ஒருபெண்
அம்மணப் பிணமாய் கிடக்க....

பார்க்க சகிக்காத அப்பன் ...
அவன் பிணமோ அடுத்த பக்கம்...

இனப்படுகொலையில்
இதற்கல்லவோ முதல் பரிசு...

உயிர் பிழைத்த ஒற்றை தமிழன்
வெறுப்பில் கேட்டான்.....

நானும் செத்தால் உன் ஊர்
அரசியல் நடக்குமா என்று...